Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொந்தகை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு: ஜனவரி 12ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
​‘அப்பரும், திருநாவுக்கரசரும் சைவத்தின் கண்கள்’: திருமந்திர தொடர்சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
 ​‘அப்பரும், திருநாவுக்கரசரும் சைவத்தின் கண்கள்’: திருமந்திர தொடர்சொற்பொழிவு

பதிவு செய்த நாள்

10 ஜன
2026
12:01

திருப்பூர்: ‘‘சைவத்தின் கண்களாக இருந்து, திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழால் வளர்த்துள்ளனர்,’’ என, தருமை ஆதீன புலவர் பாலறாவாயன் பேசினார்.


கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், ‘மார்கழி அருள்மழை’ என்ற திருமந்திர தொடர்சொற் பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. கொங்கு வேளாளர் மெட்ரிக், வித்ய விகாசினி பள்ளி குழந்தைகளின் திருமுறை இசைப்பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார், சபரி கோல்டு அண்ட் டைமண்ட் உரிமையாளர் முத்து நடராஜன், சைவ பேராசிரியர் சிவசண்முகம் முன்னிலை வகித்தனர். 


தருமை ஆதீன புலவர் முனைவர் பாலறாவாயன், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற தலைப்பில் பேசியதாவது: கொங்கு மண்டலம், சைவம் வளர்ப்பதில் முன்னோடியாக இருப்பதால் தான் தொழில் வளம் பெற்ற செழுமையான பகுதியாக இருக்கிறது. கொங்கு ஆடல் வல்லான் அறக்கட்டளை மூலமாக, 7,000 பள்ளி குழந்தைகள் திருமுறை பயிற்சி பெறுவது பாராட்டுக்குரியது. இந்தியாவிலேயே, தமிழகம் தான், தமிழால் சைவத்தை வளர்க்கிறது. சைவ மரபில் வந்தவர்களால், திருப்பூர் வளர்கிறது. உறுப்புகளில் சிறந்தது கண் தான் என்று அறநுால்கள் கூறுகின்றன. உடலில் எந்த உறுப்பு பாதித்தாலும், கண்ணில் இருந்து தான் கண்ணீர் வரும். சைவத்தின் கண்களாக இருந்து, சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வளர்த்துள்ளனர்; சைவத்தின் இரு கண்களாக விளங்கி, தமிழலால் சைவத்தை வளர்த்தனர். ஞானசம்பந்தர் பதிகம் சூத்திரம் போல் இருக்கும். திருநாவுக்கரசரின் பதிகங்கள் விளக்கவுரை போல் இருக்கும். தேவாரம் பாடியவர்கள் சிவனை மட்டுமே பாடியுள்ளனர். சுந்தரர் மட்டுமே சிவசக்தியாக பாடியுள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar