Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ​‘அப்பரும், திருநாவுக்கரசரும் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: பக்தர்கள் தரிசனம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு: ஜனவரி 12ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு: ஜனவரி 12ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்

பதிவு செய்த நாள்

10 ஜன
2026
12:01

திருப்பதி: ஜனவரி 12ல் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமான ஏவுதலுக்காக, இன்று (ஜனவரி 10) திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் வழிபாடு நடத்தினார்.


புவியை கண்காணிக்கும், இ.ஓ.எஸ்., - என்1 உட்பட, 18 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட், ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, வரும் 12ம் தேதி காலை 10:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதில், சென்னையைச் சேர்ந்த விண்வெளி துறை, ஸ்டார்ட் அப் நிறுவனமான, ஆர்பிட்எய்டு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஆயுள்சாட் செயற்கைக்கோளும் ஒன்று.


இந்நிறுவனம், புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோளுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்பும் தீர்வுகளுடன், விண்வெளியில் எரிபொருள் நிலையங்கள் அமைப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பிஎஸ்எல்விசி சி-62 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமான ஏவுதலுக்காக, இன்று (ஜனவரி 10) திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் வழிபாடு நடத்தினார். இவருடன் சக இஸ்ரோ விஞ்ஞானி குழுவினர் உடன் வந்து இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் நாராயணன் கூறுகையில், “பிஎஸ்எல்வி-சி62 / இஓஎஸ்-என்1 திட்டம், 2026ம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் ஏவுதல் மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 64-வது ஏவுதல் ஆகும். இந்த ராக்கெட் மூலம் எட்டு வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதுவரை, இஸ்ரோ 442 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்தத் திட்டம் புவி கண்காணிப்பு பணிக்கு பேருதவியாக இருக்கும்” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar