நடுவீரப்பட்டு: பாதாள காளி கோவிலில் நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் பாதாள காளி உள்ளது. இந்த கோவிலில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு, நேற்று தை மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. இதையொட்டி நேற்று மதி யம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாக வேள்விகள் துவங்கின. தொடர்ந்து, 2:30 மணிக்கு யாக வேள்வியில் மிளகாய்வற்றல் கொட்டப்பட்டு யாகம் நடந்தது. மேலும், மகா பூர்ணாஹூதி நடந்து,யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 3:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.