நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. இதையொட்டி, இரவு 11:00 மணிக்கு விநாயகர், ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், தனிஅம்மன், சண்டிகேஸ்வரர், வள்ளி தேவசேனா சுப்பரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவிலில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் உற்சவம் நடந்தது. தெப்பல் உற்சவத்தில் பக்தர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.