Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையாண்டவர் கோவிலில் தெப்பல் ... திருப்புத்துாரில் தைப்பூச விழா வெள்ளி வேலுக்கு அபிஷேகம் திருப்புத்துாரில் தைப்பூச விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோவிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?

பதிவு செய்த நாள்

19 ஜன
2026
02:01

திருவண்ணாமலை: ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரோக்கர்கள் ஆதிக்கத்தை தடுத்து, பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், வார விடுமுறை நாட்களில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி காலங்களில், கிழக்கு கோபுரமான ராஜகோபுரம் மற்றும் வடக்கு அம்மணி கோபுரம் வழியாக பக்தர்கள் எளிதாக சென்று, மேற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், கோவில் வளாகம், 27 ஏக்கர் பரப்பளவு என்பதாலும், எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் எளிதாக கோவிலினுள் சென்று வெளியே வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டனர். அதே நேரத்தில், ஆந்திரா, தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்களின் குல தெய்வம் அருணாசலேஸ்வரர் தான் என, அம்மாநிலங்களை சேர்ந்த ஆன்மிகவாதிகள் தெரிவித்ததால், அம்மாநில மக்களின் வருகையும் பல மடங்கு அதிகரித்தது. இதை சாதகமாக பயன்படுத்தி, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களை, மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வைத்து தரிசனத்திற்கு அனுமதிக்கின்றனர்.


இலவச தரிசனம் சாதாரண நாட்களில், 3 மணி நேரமும், வார விடுமுறை, விழா காலங்களில், 7 முதல், 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், ஆன்மிக சுற்றுலா வரும் பக்தர்கள், குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து, அடுத்த கோவிலுக்கு செல்ல முடியாமல் ஒரு நாள் முழுதும் திருவண்ணாமலையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, புரோக்கர்கள் சிலர், ஒரு நபருக்கு, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை வசூலித்து, கோவிலில் உள்ள முக்கிய ஊழியர்களின் துணையோடு அரை மணி நேரத்தில் தரிசனம் செய்து அனுப்பி வைக்கின்றனர். இதனால், பண வசதி இல்லாத பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவிலில் தினமும் ஆறு கால அபிஷேகம் நடத்தப்படும் நிலையில், ஒரு கால அபிஷேகத்திற்கு, ஆறு குழுவினர் தலா, 5 பேர் வீதம், 30 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதில், ஒரு குழுவினர் கோவிலுக்கு அபிஷேக கட்டணம், 2,500 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், 4,000 ரூபாய்க்கு மேல் கோவில் ஊழியர்களால் வசூலிக்கப்பட்டு, கோவிலுக்கு, 2,500 ரூபாய்க்கு மட்டும் ரசீது போடப்படுகிறது. இவ்வாறு தினசரி பல ஆயிரம் ரூபாய் பக்தர்களிடம் மோசடியாக வசூலிக்கப்படுகிறது. மேலும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும், புரோக்கர்கள் குறுக்கு வழியில் உள்ளே அழைத்து செல்லும் பக்தர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. புரோக்கர்கள் ஆதிக்கத்தை தடுத்து, பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar