திருப்பூர் முன்சீப் சீனிவாசபுரம் ஸ்ரீராம பஜனை சபாவில், ஆண்டுதோறும் ஸ்ரீராதா கல்யாண மஹா உற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், அஷ்டபதி பஜனையுடன் ஸ்ரீராதா கல்யாண மஹா உற்சவம் துவங்கியது. இரவு, 8:00 மணிக்கு, திவ்ய நாம பஜனை, டோலோத்ஸவம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, பக்தர்கள் திரளாக பங்கேற்ற உஞ்சவிருத்தி நடந்தது. காலை, 10:00 மணிக்கு ஸ்ரீராதா கல்யாண உற்சவம், சிறப்பு பஜனையுடன் கோலாகலமாக நடந்தது; மகா தீபாராதனையை தொடர்ந்து, ஆஞ்சநேய உற்சவமும் நடைபெற்றது. சென்னை அஸ்வின் குமார் பாகவதர் உள்ளிட்டோர் பஜனையும், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகளும் நடந்தன.ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர்.