Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் ... ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ராமநாதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாடிக்கொம்பு அருகே 500 ஆண்டு முந்தைய அம்மன் சிற்பம்: வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு
எழுத்தின் அளவு:
தாடிக்கொம்பு அருகே 500 ஆண்டு முந்தைய அம்மன் சிற்பம்: வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு

பதிவு செய்த நாள்

23 ஜன
2026
04:01

தாடிக்கொம்பு; தாடிக்கொம்பு உண்டார்பட்டி நாச்சியார் குளக்கரையில் ஊரை காக்கக்கூடிய 500 ஆண்டு பழமை வாய்ந்த பிடாரியம்மன் சிற்பம் உள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.


திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக் குழு ஆய்வாளர் ந.தி. விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தின முரளிதர் ,வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், பெருமாள்சாமி கூறியதாவது:தாடிக்கொம்பு உண்டார்பட்டி நாச்சியார் குளக்கரையில் பழமை வாய்ந்த ஊரைக் காக்கும் பிடாரியம்மன் சிற்பம் உள்ளது. இந்த சிற்பம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அன்றைய காலகட்டத்தில் ஒழுங்கற்ற கல்லில் செதுக்கப்பட்டது. தலையில் நெருப்பு சுடர் பறக்கும் அக்கினி கிரீடம், உருட்டு விழிகளுடன் கோபப்பார்வை , கோரை பல் , காதுகளில் வட்ட குண்டல், சடச கலையான கரங்கள் ஆறும், இடது கை முன் நீட்டி உள்ளது. அதில் உடுக்கையும் பின்புற கீழ் கையில் தரையில் ஊன்றிய வாளும், தோலின் மேல் உள்ள கைகளில் அக்னி சுடரும், வலது தோள் கையில் வெட்டுப்பட்ட மனித தலையும், கீழ் நடு கையில் மேல்நோக்கிய சூலம், கீழ் கையில் அம்பு , தோள்களில் தோள் வளையம், முழங்கையில் கடக வளையல்கள் , கை மணிக்கட்டுகளில் சங்கு வளையங்களும் உள்ளன.


உத்குடியாசனத்தில் வலது கால் பீடத்திலும், இடது கால் தரையில் ஊன்றிய நிலையிலும் அமர்ந்த நிலையில் இடையில் இடுப்பு பட்டியை சுற்றி விரி தொங்கு மேகலையும், கால்களில் தண்டமும் கொண்டு கோபப்பார்வையுடன் அமர்ந்திருக் கிறாள். போர் வீரர்கள் போருக்கு செல்லும்போது துர்க்கை, தவ்வை, பிடாரி எனும் போர் கடவுள்களை வணங்கி செல்வர். இச்சிலை இருக்கும் கிழக்குப் பகுதி ஊர்கள், பாண்டியர் கால‌ படை வீடுகளான சீலப்பாடி, படியூர், முள்ளிப்பாடி, தாமரைப்பாடி என பல படை வீடுகள் இருந்துள்ளது. மேலும் ஊர்களின் காவல் தெய்வமாக பிடாரியம்மன் இருந்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிகளை ஆய்வு செய்யும்போது சிற்பம் மண்ணில் புதைந்து இருந்தது. தற்போது இப்பகுதி மக்கள் சிற்பத்தை எடுத்து வழிபட்டு வருகின்றனர் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar