முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2026 10:01
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, காந்தி வீதியில் தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி திருமஞ்சனத்துடன் துவங்கியது.
இதையொட்டி, தினமும் காலை 10:00 மணிக்கு சிறப்பு ஹோமம், திருமஞ்சனம் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று கா லை தேர் வீதியுலா மற்றும் மாலை தீர்த்த வாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (25ம் தேதி) மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 26ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.