பரமக்குடி அங்காளம்மன், வாணி கருப்பணசாமி பால்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2026 03:02
பரமக்குடி; பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பணசாமி கோயில் மாசி சிவராத்திரி பாரிவேட்டை விழாவில் 26ம் ஆண்டு பால்குட உற்சவம் நடந்தது. கோயிலில் பிப்., 13 காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பிப்., 15 மகா சிவராத்திரி அன்று அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
பிப்., 17 இரவு பாரிவேட்டையும் தொடர்ந்து அம்மன் அன்ன மற்றும் சிம்ம வாகனத்தில் உலா வந்தார். இன்று காலை 9:00 மணிக்கு கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது பெரிய பஜார், முத்தாலம்மன் கோயில் வழியாக பால்குடங்களை பக்தர்கள் சுமந்து வந்தனர். பின்னர் 11:00 மணி தொடங்கி அனைத்து வகையான அபிஷேகம் நிறைவடைந்து, பால் குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், தொழிலதிபர்கள் மணிவண்ணன், ராமச்சந்திரன், வைரம், ஓம் சக்தி நண்பர்கள் ஆகிய பலரும் கலந்து கொண்டனர். சோனியா நன்றி கூறினார்.