Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் உண்டியல் ... சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை துவக்கம் சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோயில் கருவறையில் கல்வெட்டை கண்டுபிடித்த அமைச்சர்
எழுத்தின் அளவு:
பெருமாள் கோயில் கருவறையில் கல்வெட்டை கண்டுபிடித்த அமைச்சர்

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
10:02

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் பெருமாள் கோயில் கருவறையில் இருந்து கல்வெட்டை கண்டுபிடித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அதுகுறித்து ஆய்வுக்கு உத்தரவிட்டார். ஆய்வில் சிவன் கோயில் கற்களில் இருந்து பெருமாள் கோயில் கட்டப்பட்டது தெரியவந்துள்ளது.


அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு. இவரது வீட்டின் எதிரில் சென்னகேசவ பெருமாள் கோயில் உள்ளது. பிப்.,13ல் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகளின் போது பாலாலயம் செய்து சுவாமி, கருவறையில் இருந்து மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் கருவறையில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். கருவறையின் உட்புறச் சுவரில் சில தமிழ்க் கல்வெட்டுத் துண்டுகள் இருப்பதை அறிந்தார்.


உடனே மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும், தொல்லியல் அறிஞருமான சாந்தலிங்கத்தை தொடர்பு கொண்டு படி எடுத்துப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் கோயிலுக்குச் சென்று அங்கிருந்த 5 கல்வெட்டுகளைப் படி எடுத்தனர். அதில் ஒரு கல்வெட்டு முழுமையாக இருந்தது. அதில் குலசேகர பாண்டியரின் நான்காவது ஆட்சி ஆண்டில், கற்குறிச்சி ஈஸ்வரன் என்னும் சிவன் கோயிலில் அர்த்தமண்டபத்தில் நிலை கல் அமைத்த செய்தி இடம் பெற்றிருந்தது. மற்ற கல்வெட்டுகள் துண்டுகளாக இருந்ததால் முழு விபரம் அறியமுடியவில்லை. கல்வெட்டு எழுத்துகளை படித்தறியும் திறனுள்ள அமைச்சர் தங்கம்தென்னரசு, முழு கல்வெட்டை படித்ததில், கல்குறிச்சியில் இடிந்த சிவன் கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட கற்களை கொண்டு 13ம் நுாற்றாண்டில் பாண்டியர் மன்னர் ஆட்சியில் சென்னசேகவ பெருமாள் கோயில் கட்டப்பட்டது தெரியவந்தது. கல்குறிச்சி ஊர் மல்லாங்கிணற்றில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை, நேற்றுமுன்தினம் இரவு ... மேலும்
 
temple news
பழநி; பழநி தெற்கு ரத வீதியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் பேச்சியம்மன் கோயிலில் பாலாலயம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar