சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை, நேற்றுமுன்தினம் இரவு துவங்கியது.
சின்னாளபட்டி கடைவீதியில் உள்ள காமய (காமன்) சுவாமி கோயில் திருவிழா, ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடத்தப்படுகிறது. சிறப்பு பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தினம் ஒரு கட்டளைதாரர் வீதம் 15 நாட்களுக்கு வழிபாடு நடக்கும். தினமும் கட்டளைதாரர்கள் வழங்கும் பலவித பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆராதனைகள் நடப்பது வழக்கம். நிறைவாக, மாசி பவுர்ணமியில் காமன் தகன விழா நடக்கும்.