அங்காளம்மன் பேச்சியம்மன் கோயிலில் பாலாலயம் நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2026 10:02
பழநி; பழநி தெற்கு ரத வீதியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் பேச்சியம்மன் கோயிலில் பாலாலயம் நடந்தது. பழநி, தெற்கு ரத வீதியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் பேச்சியம்மன் கோயில் திண்டுக்கல் மாவட்ட ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் உள்ளது. இதில் கும்பாபிஷேகம் செய்ய விமான பாலாலயம் செய்ய யாகம் நடந்தது. இதில் கண்ணாடியில் பாலாலயம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் நரசிம்மன், கண்ணன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.