ஒற்றை பனைமரத்து காளியம்மன் கோயில் வருடாபிஷேக வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2026 12:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஓம்சக்தி நகர் 3வது தெருவில் உள்ள ஒற்றை பனைமரத்து காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 2ம் ஆண்டு வருடாபிஷேகம் விழா நடந்தது.
கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜைகள் நடந்தது.
ஒற்றை பனைமரத்து காளியம்மன் முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பநீர் அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் குத்துவிளக்கு பூஜையில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.