கோவில்களில் சஷ்டி பூஜை பக்தர்கள் திரளாக பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2026 12:02
வால்பாறை: முருகன் கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாசி மாத சஷ்டி பூஜையான நேற்று காலை, 6:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு, கணபதி பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
இதே போல் வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.