Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  மேல்மலையனுார் கோவிலில் ரூ.66 ... கும்பகோணத்தில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தார் அத்திவரதர்: 10 நாட்கள் தரிசிக்கலாம்  கும்பகோணத்தில் பாதாள அறையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக நான்கு தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக நான்கு தேரோட்டம்

பதிவு செய்த நாள்

28 பிப்
2026
08:02

தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை மகாமகமும், ஆண்டுதோறும் மாசி மதம் மாசிமகமும் நடைபெறும்.  இந்நிலையில், மாசிமக விழாவையொட்டி, ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய ஆறு சிவாலயங்களில், கடந்த பிப்.21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 63 நாயனர்மார்கள் வீதியுலா, ஓலைசப்பர வீதியுலா, பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து  ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்பாள், விநாயகர், முருகன் ஆகிய நான்கு சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மார்ச் 1 சண்டிகேஸ்வரர், காலஹஸ்தீஸ்வரர் மற்றும் சோமேஸ்வரர் கோவில்களின் தேரோடும் வீதிகளில் தேரோட்டமும், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய மூன்று கோவிலின் தேரோட்டம் மகாமக குளத்தை சுற்றி நடைபெறுகிறது.  மார்ச் 2ம் தேதி 11 சிவன் கோவில் சுவாமிகள், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, வீதியுலாவாக மகா மககுளக்கரையில் எழுந்தருளி பகல் 12:00 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதே போல் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று பெருமாள் கோவில்களில்  மாசி மகமான மார்ச் 2ம் தேதி, காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் திருத்தேரோட்டம், தொடர்ந்து பெருமாள் உபயநாச்சியாருடன்,  பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar