பரமக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சைக்கிள் யாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2026 04:03
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் இருந்து 50வது ஆண்டாக திருச்செந்தூர் நோக்கி பல நூறு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை சென்றனர்.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆறு படித்துறை பகுதியில் சக்தி குமரன் செந்தில் கோயில் உள்ளது. கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது. இங்கு மாசி மக விழாவையொட்டி தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் திருவிளக்கு வழிபாடு, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 50வது பொன்விழா ஆண்டாக குருவடியார் இலக்குமணன் தலைமையில் திருச்செந்தூர் நோக்கி சைக்கிள் யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டனர். இவர்கள் மூன்று நாள் பயணத்திற்கு பிறகு திருச்செந்தூரில் நேர்த்திக்கடன் செலுத்தி மீண்டும் சைக்கிளில் பரமக்குடி திரும்ப உள்ளனர். வழி நெடுகிலும் ஏராளமானவர்கள் உணவு வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.