சனிப்பெயர்ச்சி; மொரட்டாண்டி சனீஸ்வரருக்கு 48 நாட்கள் இடைவிடாது நல்லெண்ணெய் அபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2026 07:03
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, நல்லெண்ணெய் அபிஷேகம் துவங்கியது.
நவக்கிரங்களில் முதன்மையானவரான சனீஸ்வரர் இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜைகள் நேற்று தொடங்கியது. மதியம் கோவில் வளாகத்தில் உள்ள 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக சனீஸ்வரருக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
மாலை முதல்கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 5:௦௦ மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சனிப் பெயர்ச்சி சிறப்பு ேஹாமம், பரிகார ேஹாமங்களை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடாகி, காலை 8:26 மணிக்கு கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு 80 அடி உயர மகா கும்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக அமைத்துள்ள கொப்பரையில் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் தங்களுடைய முகத்தையும், விநாயகர் மற்றும் சனி பகவானின் திருமேனியையும் தரிசித்து, சனி தோஷத்திலிருந்து விடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 48 நாட்களுக்கு அபிஷேகம் சனிப் பெயர்ச்சியையொட்டி, இக்கோவிலில் உள்ள 12 அடி உயர சனீஸ்வரருக்கு இன்று காலை 6:00 மணி முதல் 48 நாட்களுக்கு இடைவிடாது நல்லெண்ணெய் அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 3 அடி உயர சனீஸ்வரருக்கு, பக்தர்களே நேரடியாக நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.