Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் மார்ச் 17ல் கோயில் ... அருவங்காடு ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்ட தின விழா; சுவாமி வீதி உலா அருவங்காடு ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிப்பெயர்ச்சி; மொரட்டாண்டி சனீஸ்வரருக்கு 48 நாட்கள் இடைவிடாது நல்லெண்ணெய் அபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
சனிப்பெயர்ச்சி; மொரட்டாண்டி சனீஸ்வரருக்கு 48 நாட்கள் இடைவிடாது நல்லெண்ணெய் அபிஷேகம் துவக்கம்

பதிவு செய்த நாள்

06 மார்
2026
07:03

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, நல்லெண்ணெய் அபிஷேகம் துவங்கியது.


நவக்கிரங்களில் முதன்மையானவரான சனீஸ்வரர் இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜைகள் நேற்று தொடங்கியது. மதியம் கோவில் வளாகத்தில் உள்ள 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக சனீஸ்வரருக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.


மாலை முதல்கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 5:௦௦ மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சனிப் பெயர்ச்சி சிறப்பு ேஹாமம், பரிகார ேஹாமங்களை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடாகி, காலை 8:26 மணிக்கு கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு 80 அடி உயர மகா கும்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக அமைத்துள்ள கொப்பரையில் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் தங்களுடைய முகத்தையும், விநாயகர் மற்றும் சனி பகவானின் திருமேனியையும் தரிசித்து, சனி தோஷத்திலிருந்து விடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 48 நாட்களுக்கு அபிஷேகம் சனிப் பெயர்ச்சியையொட்டி, இக்கோவிலில் உள்ள 12 அடி உயர சனீஸ்வரருக்கு இன்று காலை 6:00 மணி முதல் 48 நாட்களுக்கு இடைவிடாது நல்லெண்ணெய் அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 3 அடி உயர சனீஸ்வரருக்கு, பக்தர்களே நேரடியாக நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar