பதிவு செய்த நாள்
09
மார்
2026
07:03
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
பெரம்பலுார் மாவட்டம், மருதையான் கோவிலைச் சேர்ந்தவர் பாலசந்தர். இவர், புதிதாக வீடு கட்டுவதற்காக பில்லர் அமைக்க, நேற்று மதியம், 12:45 மணியளவில், குழி தோண்டினார். ஐந்து அடி ஆழத்தில் குழி தோண்டிய போது, 2 அடி உயரமுள்ள பித்தளை பெருமாள் சிலை, துாபக்கால், மணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து, தகவலறிந்த ஆலத்துார் தாசில்தார் கவிதா, நிகழ்விடத்திற்கு சென்று, கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கைப்பற்றினார். அவை, ஆலத்துார் தாசில்தார் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன.