ஏரிவாய் அழகிய மணவாள பெருமாள் கோவிலில் தவன உத்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2026 08:03
காஞ்சிபுரம்: ஏரிவாய் அழகிய மணவாள பெருமாள் கோவிலில், தவன உத்சவம் விமரிசையாக நடந்தது .
முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிவாய் கிராமத்தில், கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாசி மாதத்தில் தவன உத்சவம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டிற் கான உத்சவம் நேற்று நடந்தது. உத்ச வத்தையொட்டி, கோவில் பிரகாரத்தில் நறுமணம் கமழும் தவனத்தால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் கமலவல்லி தாயாருடன், அழகிய மணவாள பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மஹாதீப ஆராதனை நடந்தது.