தொண்டி: தொண்டி அருகே உள்ள விஸ்வநாதனேந்தல் கிராமத்தில் நவசக்தி வராகி அம்மன், பிரத்தியங்கரா தேவி மற்றும் நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பங்களில் நிரப்பபட்ட புனித நீர் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தது.அதனை தொடர்ந்துயாகசாலையில் கும்பங்களை வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிேஷகம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முருகேசன் குடும்பத்தினர் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* ரெகுநாதபுரம் அருகே வாலாந்தரவையில் உள்ள சுயம்பு வாழ வந்தாள் அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. மார்ச் 7ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது.
நேற்று காலை கடம் புறப்பட்டு கணபதி, முருகன் சுயம்பு வாழ வந்தாள் அம்மன், கருப்பர், ராக்கச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பின்னர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.