Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய கதிர் வலம் வரும் ... நினைத்த காரியத்தை நிறைவேற்றி தரும் வீர கணபதி நினைத்த காரியத்தை நிறைவேற்றி தரும் ...
முதல் பக்கம் » துளிகள்
ஏழு அம்மன்களை ஒரே இடத்தில் தரிசிக்க ஸ்ரீசப்த மாதேயாரா கோவில்
எழுத்தின் அளவு:
ஏழு அம்மன்களை ஒரே இடத்தில் தரிசிக்க ஸ்ரீசப்த மாதேயாரா கோவில்

பதிவு செய்த நாள்

17 மார்
2026
11:03

பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா அரலே மகனஹள்ளி கிராமத்தில் உள்ளது, ஸ்ரீசப்த மாதேயாரா கோவில். ஸ்ரீசப்த மாதா மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவில், உள்ளூர் மக்களால் ஏழு அம்மன்களின் கோவில் என, அழைக்கப்படுகிறது.


கோவில் கருவறையில், பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என, ஏழு அம்மன் சிலைகள் அருகருகே உள்ளன. ஒரே இடத்தில் ஏழு அம்மன்களின் தரிசனம் கிடைப்பதால், இக்கோவிலை மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பக்தர்கள் பார்க்கின்றனர். கோவில், 300 ஆண்டுகள் பழமையானது என்றும் வரலாறு கூறுகிறது.


ஹிந்து மதம், தர்மத்தின் புகழை பரப்புவதற்காக, இக்கோவிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் நிதி உதவி அளித்தார் என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் நவக்கிரகங்கள், விநாயகர், கால பைரவர் சுவாமிகளுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வதற்கு என, தனி இடம் அமைக்கப்பட்டு உள்ளது.


கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் கற்களால் செதுக்கப்பட்ட இரண்டு யானை சிலைகள் உள்ளன. இது, குழந்தைகளை வெகுவாக கவர்கிறது. கோவிலை சுற்றி பார்த்து விட்டு வெளியே வந்து அமரும் வகையில், கல் பெஞ்சுகள் அமைத்து உள்ளனர். மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்றால் சாமி தரிசனம் முடிந்ததும், மலை உச்சியில் இருந்து சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை உள்ள வயல்வெளிகளை பார்த்து ரசிக்கலாம்.


கோவில் நடை தினமும் காலை 7:00 முதல் மதியம் 12:30 மணி வரையும், மதியம் 3:30 முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்து இருக்கும். மேலும் தொடர்புக்கு: 96204 57219, 70191 55945 என்ற மொபைல் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் அமதள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வீர கணபதி கோவில். பல ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் கட்டட கலைக்கு பிரசித்தி பெற்ற, பல்வேறு புராதன கோவில்கள் உள்ளன. அவை இன்றும் பக்தர்களை தன் ... மேலும்
 
temple news
கேரளாவில் உள்ள பகவதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோன்று, கர்நாடகாவின் மங்களூரிலும், இத்தகைய ... மேலும்
 
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar