நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், நாகலிங்க பூக்களின் சீசன் துவங்கியுள்ளது. கூடலூரில் சில கோவில்களிலும், நாடுகாணி சூழல் சுற்றுலா தாவர மையத்திலும், இப்பூக்கள் மலர்ந்துள்ளது. கோழிபாலம் அருகே, கோழிக்கோடு சாலையோரம் அமைந்துள்ள முனிஸ்வரன் கோவில் உள்ள மரத்தில், பூத்துள்ள நாகலிங்க பூக்கள் பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது. மேலும், இவ்வழியாக, பயணிக்கும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பூக்களின் ரசித்து படம் எடுத்து செல்கின்றனர். தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், நாகலிங்க பூவின் மத்தியில் பகுதி சிவலிங்கம் போன்ற வடிவமும், அதற்கு மேல் பாம்பு இறைவனுக்கு குடை பிடிப்பது போன்று இருப்பதால், இந்தப் பூக்கள், சிவலிங்க பூஜைக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இவை பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது எனறனர்.