பெரியதுரையான் கோயில் திருவிழா: 250 ஆடுகள் வெட்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2026 11:05
ஆயக்குடி: பழநி கணக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைபட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள பெரியதுரையான் கோயில் திருவிழாவை முன்னிட்டு 250க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கொடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி. கணக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை பட்டி கிராமத்தில் பெரியதுரையான் கோயிலில் கருப்பணசாமி, செல்வ விநாயகர், தன்னாசியப்பன், போலகருப்பு சன்னதிகள் உள்ளன 45 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மே 4. அன்று தீர்த்தக்கலசம் எடுத்து வந்து கோயிலில் சேர்த்தனர். அதன் பின் கருப்பணசாமி ஊர்வலம் நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு தீர்த்தம் செலுத்துதல் நடைபெற்று அன்னதானம் நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணி முதல் கருப்பண்ண சுவாமிக்கு 250க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன காலை 11 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.