பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, 50ம் ஆண்டு அக்னி கரகம் எடுத்தல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, தண்டு மாரியம்மன் கோயிலில் விக்னேஸ்வரர் பூஜை, பூச்சாட்டு விழா, பூ கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், திருக்கல்யாணம், அலங்கார பூஜை, பொங்கல், மாவிளக்கு ஆகியன நடந்தன. நிகழ்வையொட்டி ஜோதிபுரம் பாலமுருகன் கோயிலில் இருந்து, 50ம் ஆண்டு அக்னி கரகம் ஊர்வலம், தண்டு மாரியம்மன் கோயில் வளாகத்தை வந்தடைந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.