பதிவு செய்த நாள்
28
மே
2026
11:05
திருப்பூர்: திருப்பூரில் மாணவர்களுக்கான கோடைகால ஆன்மிக பண்பாட்டு பயிற்சி துவங்கியது.
ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், 5 வயது முதல், 12 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்மிக பண்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இவ்வாண்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கி, மூன்று நாட்கள் திருப்பூர், பி.என். ரோடு, மில்லர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விஹாரில் நடக்கிறது. 5 வயது முதல், 8 வயது வரை உள்ள மாணவர்களுக்கு காலையும், 9 வயது முதல், 12 வயது வரை உள்ளவர்களுக்கு மதியம் நடக்கிறது. இம்முகாமில், பிரார்த்தனை, யோகா, ஆரோக்கியம், தேசப்பற்று, பக்தி, விளையாட்டு, குழு செயல்பாடு, நேர மேலாண்மை மற்றும் தலைமை பண்பு ஆகிய வகுப்பு நடக்கிறது. முன்னதாக, மாவட்ட தலைவர் ராஜேஷ்வரன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.