ராமராதபுரம்; பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமராதபுரத்தில் மதுரை ரோட்டில் உள்ள ஈத்கா கோரி தோப்பு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆர்.எஸ். மங்கலம் ஈத்கா மைதானத்தில், பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக ஜமாத்தார்கள், பெரிய பள்ளிவாசலில் இருந்து பெரிய கண்மாய் பாலம் அருகில் உள்ள ஈத்கா மைதானம் வரை ஊர்வலமாகச் சென்றனர். பக்ரீத் சிறப்பு தொழுகை நிறைவடைந்த பின்பு, மீண்டும் ஊர்வலமாகச் சென்ற ஜமாத்தார்கள், ஏழைகளுக்கு உதவிகள் வழங்கினர்.