Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அபிராமி அம்மன் கோயில் திருப்பணி ... நாகாத்தம்மன் கோவிலில் 1ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலகுமலையில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2013
11:01

பொங்கலூர்: பொங்கலூர், அலகுமலை முருகன் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்தனர். அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் சனிக்கிழமை வரை, சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு, தேருக்கு சுவாமி எழுந்தருளினார். மதியம் 1.00 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், வடம் பிடித்து துவக்கி வைத்தார். முதலில், விநாயகப்பெருமான் சிறிய தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3.00 மணிக்கு, பெரிய தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது. மேள, தாளம் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மாலை 5.00 மணிக்கு நிலையை அடைந்தது. பல்லடம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில், அவினாசிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருக்காவடி குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இன்றும், நாளையும் சுவாமி வீதியுலா, நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை தரிசனம், மதியம் 12.00 மணிக்கு அன்னதானம், மாலை மஞ்சள் நீராடல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் சின்னு மற்றும் தேர்த்திருவிழாக் குழுவினர் செய்து வருகின்றனர். கணியாம்பூண்டி ஊராட்சி, முருகம்பாளையம் - அழகர் அப்பிச்சி பாறையில் உள்ள மங்களாம்பிகை உடனமர் மங்களநாதசுவாமி மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா நடந்தது. காவடி எடுத்த பக்தர்கள், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்த னர். கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தன. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்பட்டன. அவிநாசியில் இருந்து பக்தர்கள், பழனி தண்டாயுதபாணி கோவில், சென்னியாண்டவர் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில்களுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar