Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லெட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் ... சூட்சமுடையார் சாஸ்தா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடையம் சீவலப்பேரியான் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
11:02

ஆழ்வார்குறிச்சி: கடையம் சீவலபேரியான் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கடையத்தில் தென்காசி - அம்பாசமுத்திரம் மெயின் ரோட்டில் சீவலபேரியான் சுடலை கோயில் உள்ளது.கோயிலில் இன்று (1ம்தேதி) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலையில் கடையம் பாரதிநகர் பொதுமக்கள், மதன்ஸ் குடும்பத்தினர், டெல்டா பெயின்ட்ஸ் பிரவீன்குமார், கீழக்கடையம் கே.எஸ்.எம்.நடராஜநாடார் சன்ஸ் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, நவகிரக பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. மாலை தீர்த்த சங்கிரகணம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், யஜமான, ஆச்சார்ய வர்ணம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், யாத்ரா ஹோமத்துடன் கும்பங்கள் யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு 9மணிக்கு மேல் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்த சமர்ப்பணம் நடந்தது. இன்று (1ம்தேதி) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், நாடி சந்தானம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், யாத்ரா தானம் ஆகிய வைபவங்கள் நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சீவலபேரியான் சுடலை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை நெட்டூர் ராமநாதகுருக்கள் நடத்துகிறார். காலை 11மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், விசேஷ அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar