தியாகதுருகம் : சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை மூன்றாவது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தங்கக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு பூஜித்தனர். அதைத்தொõடர்ந்து நடந்த ஆராதனை மற்றும் மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவில் பூசாரிகள் பாஞ்சாலை, கோவிந்தசாமி, தமிழ்செல்வன், குமார் பூஜைகளை செய்தனர்.