Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு கும்பாபிஷேகம்: ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொதிகை மலையில் மீண்டும் துளிர்க்கும் மூலிகை செடிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
10:02

தென்காசி: குற்றாலத்தில் அரிய வகை மூலிகை செடிகள் துளிர்க்க துவங்கியுள்ளன. சித்தர்களில் முதன்மையானவரான அகத்தியர் அருள்பாலிக்கும் பொதிகை மலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. பொதிகை மலை முழுவதும் பல்வேறு மூலிகை செடி, கொடிகள், மரங்கள் நிறைந்து காணப்பட்டன. தற்போது சுமார் 400 வகையான மூலிகை செடிகளே காணப்படுகின்றன. மற்ற மூலிகை செடிகள் அழிக்கப்பட்டு விட்டன.தற்போது பொதிகை மலையில் அபூர்வ மூலிகை செடிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முளைத்து பூத்துள்ளன. பாறைகளுக்கிடையே அபூர்வமாகவும், அதிசயமாகவும் வளரும் கல்தாமரை மற்றும் பூனைக் காலி, அழுகண்ணி மற்றும் சாம்பிராணி பூ, கஸ்தூரி மஞ்சள், தேவதாரு போன்ற மூலிகை செடிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு பொதிகை மலையில் மீண்டும் வளர்ந்து பூத்துக் குலுங்குகின்றன. அழுகண்ணி மூலிகை செடிக்கு சமஸ்கிருதத்தில் சவ்யகரணி என்ற பெயரும் உண்டு. உடலில் வெட்டுக் காயம் ஏற்பட்டால் இதன் இலைகளை வைத்து கட்டினால் வெட்டுப்பட்ட இடம் ஒன்று சேர்ந்துவிடும். இதை சூரணம் செய்து சாப்பிடுவர். ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வது, என்றும் மார்க்கண்டேயன் ஆக வழிவகுக்கும். இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. பாறைகளுக்கிடையே அபூர்வமாய் வளரும் கல்தாமரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஈரப்பசை உள்ள பகுதிகளில் வளரும் பூனைக் காலி நோய் வராமல் பாதுகாக்கவும், தொற்று நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது. மூலிகை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே மூலிகை அழிந்து வருவதற்கான காரணம். இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை பற்றி பாடத்திட்டத்தில் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இராப்பத்து விழாவில் இன்று முத்துப்பாண்டியன் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருப்பதி: திருமலை, ஏழுமலையான் கோவிலில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 3ம் தேதி, ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ரமண பகவானின், 146ம் ஆண்டு ஜெயந்தி விழா, திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar