Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு கும்பாபிஷேகம்: ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொதிகை மலையில் மீண்டும் துளிர்க்கும் மூலிகை செடிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
10:02

தென்காசி: குற்றாலத்தில் அரிய வகை மூலிகை செடிகள் துளிர்க்க துவங்கியுள்ளன. சித்தர்களில் முதன்மையானவரான அகத்தியர் அருள்பாலிக்கும் பொதிகை மலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. பொதிகை மலை முழுவதும் பல்வேறு மூலிகை செடி, கொடிகள், மரங்கள் நிறைந்து காணப்பட்டன. தற்போது சுமார் 400 வகையான மூலிகை செடிகளே காணப்படுகின்றன. மற்ற மூலிகை செடிகள் அழிக்கப்பட்டு விட்டன.தற்போது பொதிகை மலையில் அபூர்வ மூலிகை செடிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முளைத்து பூத்துள்ளன. பாறைகளுக்கிடையே அபூர்வமாகவும், அதிசயமாகவும் வளரும் கல்தாமரை மற்றும் பூனைக் காலி, அழுகண்ணி மற்றும் சாம்பிராணி பூ, கஸ்தூரி மஞ்சள், தேவதாரு போன்ற மூலிகை செடிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு பொதிகை மலையில் மீண்டும் வளர்ந்து பூத்துக் குலுங்குகின்றன. அழுகண்ணி மூலிகை செடிக்கு சமஸ்கிருதத்தில் சவ்யகரணி என்ற பெயரும் உண்டு. உடலில் வெட்டுக் காயம் ஏற்பட்டால் இதன் இலைகளை வைத்து கட்டினால் வெட்டுப்பட்ட இடம் ஒன்று சேர்ந்துவிடும். இதை சூரணம் செய்து சாப்பிடுவர். ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வது, என்றும் மார்க்கண்டேயன் ஆக வழிவகுக்கும். இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. பாறைகளுக்கிடையே அபூர்வமாய் வளரும் கல்தாமரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஈரப்பசை உள்ள பகுதிகளில் வளரும் பூனைக் காலி நோய் வராமல் பாதுகாக்கவும், தொற்று நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது. மூலிகை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே மூலிகை அழிந்து வருவதற்கான காரணம். இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை பற்றி பாடத்திட்டத்தில் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar