Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமா...ராமா...கோஷம் முழங்க ... கோட்டை மாரியம்மன் கோயிலில் பூத்தமலர் பூ அலங்காரம்! கோட்டை மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருக்கள் பற்றாக்குறை: மூடி கிடக்கும் ராமேஸ்வரம் கோயில் சன்னதிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
11:02

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், குருக்கள் பற்றாக்குறையால் பல சன்னதிகள் மூடிகிடக்கின்றன. இதனால் பக்தர்கள் சுவாமியை தரிச்சிக்க முடியாத நிலை உள்ளது.  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, தினமும் வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் சிறப்பு தரிசனம், ஸ்படிக லிங்கம் தரிசனத்திற்காக ரூ.50ம், அர்ச்சனை செய்வதற்காக ஐந்து ரூபாயும், கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. கூட்ட நேரத்தில், கட்டணம் செலுத்தினாலும் சுவாமி தரிசனம் அரிதாகி விடும். இலவச தரிசன பாதையில செல்லும் பக்தருக்கு நேரும் கதியை சொல்லி மாளாது. காரணம், அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப கோயிலில் குருக்களுக்கு அடுத்தபடியாக பணிபுரியும் ஊழியர்கள் (கைங்கேரியம்) பணியிடம் பல ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. பூஜையோடு தொடர்புடைய, 61 கோயில் உள்துறை ஊழியர்களுக்கு, 22 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், சுவாமி, அம்மன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதிகள் முன்பு வேதம் ஓதுவதில்லை.

சேதுமாதவர், தட்சிணாமூர்த்தி, பள்ளி கொண்ட பெருமாள், கால பைரவர் சன்னதிகளில் குருக்கள் இன்றி பூஜை நடத்தாமல், மூடியே கிடக்கிறது. மேலும், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் சன்னதியை ஒரு குருக்களும், விநாயகர், முருகன், நவக்கிரகம் சன்னதியை ஒரு குருக்களும், சன்னதிக்கு மாறி மாறி சென்று தீப  ராதனை காட்டி வருகின்றனர். ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி பஞ்சாமிர்தம், ருத்ராட்சம், சங்கு, கலசம் அபிஷேகம், பூஜை செய்யும் பக்தர்களுக்கு 2 மணி நேரம் வரை பூஜை நடத்த வேண்டும். ஆனால், 30 நிமிடத்தில் முடிந்துவிடுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். உள்துறை ஊழியர், நிர்வாக உழியர்கள் என 188 பேர் பணியாற்ற வேண்டிய இங்கு, 129 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். விஸ்வ இந்து பரிஷத் தென் மண்டல இணை அமைப்பாளர் சிவராஜன் கூறியதாவது: தமிழக அரசு ராமேஸ்வரம் கோயிலில், உண்டியல் வருவாய் பெருக்க முக்கியத்துவம் கொடுத்து, மத சடங்குளில் தலையிட்டு தகுதியற்றவர்களை குருக்களாக நியமிக்க திட்டமிட்டு உள்ளது. வேதம், ஆகமம் படித்தவர்களை தேர்வு செய்யாமல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என உத்தரவிட்டுள்ளது. கோயிலில் குருக்கள் பற்றாக்குறையால் மூடிகிடக்கும் பல சன்னதிகளை கண்டு பக்தர்கள் வேதனை அடைகின்றனர். தகுதியான குருக்களை நியமித்து, கோயில் புனிதம் காக்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபடுவோம். இவ்வாறு தெரிவித்தார்.  கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: 25 குருக்கள் நியமனத்திற்கு விண்ணப்பம் வந்துள்ளது, பரிசீலனை முடிந்து விரைவில் உயரதிகாரிகள் உத்தரவுப்படி நியமனம் செய்யப்படும். அனைத்து சன்னதிகளிலும் குருக்கள் பணியில் உள்ளனர்  என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 
temple news
நத்தம்: சிவன் கோயில்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar