சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் மாதம் கடைசி வெள்ளி அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. கோயிலில் தை கடைசி வெள்ளியான இன்று (8ம் தேதி) சுவாமி மூலவர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் காலை 7.30, 11.30 மணிகளில் நடக்கிறது. சிறப்பு வழிபாட்டுக்கு சேரன்மகாதேவி மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொள்வர். பொது மக்களுக்காக சேரன்மகாதேவியில் இருந்து கோயில்வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. கோயில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ஏற்பாடுகளை பொறுப்பாளர் சொரிமுத்து செய்துள்ளார்.