பதிவு செய்த நாள்
15
பிப்
2013
11:02
பாவூர்சத்திரம்: ஆவுடையானூர் முப்புடாதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் ஆவுடைசிவன்பட்டி முப்புடாதி அம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு கடந்த 12ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி பூஜை, புண்ணியாவாசனம், கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, வாஸ்துபூஜை, வாஸ்துஹோமம், பிரவேசபலி நடந்தது. 13ம் தேதி சூர்யா பூஜை, பரிவாரதேவதைகளுக்கு ஹோமம், பஞ்சகுண்டஹோமம், யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு மங்கள இசை, தேவதைகளுக்கு அர்ப்பணம், வேதகோஷம், கும்பபிரவேஷம், மகா கும்பாபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் வரிதாரர்கள், விழா கமிட்டியினர், பொதுமக்கள் செய்திருந்தனர். இரவில் திரைப்பட இன்னிசை கச்சேரி நடந்தது.