விருத்தாசலம்: மாசிமக ஐந்தாம் நாள் உற்சவத்தில், பஞ்சமூர்த்திகள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா 16ம் தேதி துவங்கியது. இதையொட்டி தினம் ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேசுவரர், விபசித்து முனிவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நேற்று ஐந்தாம் நாள் உற்சவத்தையொட்டி, காலை 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. இரவு 7:00 மணிக்கு அலங்கரித்த யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 8:00 மணிக்கு போடி கீதமாலிகா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.