பதிவு செய்த நாள்
21
பிப்
2013
11:02
வாலாஜாபாத்:ஊத்துக்காடு தேவி எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை (22ம் தேதி) காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. வாலாஜாபாத்தை அடுத்துள்ளது ஊத்துக்காடு கிராமம். இங்கு, தேவி எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டது. திருப்பணி முடிந்து, நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதையொட்டி, நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், தீபாராதனை நடந்தது. மாலை கலச பூஜை, வேதிகை பூஜை நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், தத்வார்ச்சனை, தத்வஹோமம், சத்குருஸம்ஹாரத்ரிசதி ஹோமம் போன்றவை நடைபெற உள்ளது. மாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். நாளை காலை 5:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறும். காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள், ராஜகோபுரம், தேவி எல்லம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடைபெறும். பகல் 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், தீபாராதனை, இரவு அம்பாள் திருவீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.