பதிவு செய்த நாள்
23
பிப்
2013
10:02
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க, பிப்., 23,ல் ராமேஸ்வரத்தில் இருந்து 3,643 பக்தர்கள் பயணம் செய்கின்றனர்.விழா கொடியேற்றம் இன்று நடக்கிறது. நாளை காலை சிறப்பு திருப்பலி பூஜை நடக்கிறது. விழாவில் பங்கேற்க பக்தர்கள் தயாராகி உள்ளனர். இன்று காலை, பாதுகாப்பு படையின், சோதனைக்கு பின், 114 படகுகளில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து செல்கின்றனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக, நேற்று முதல் கடலில், இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான, அதிநவீன ரோந்து கப்பல், சென்னையில் இருந்து புறப்பட்டு, இன்று ராமேஸ்வரம் வரவுள்ளதாக, பாதுகாப்புதுறையினர் தெரிவித்தனர்.