திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பிப்.25ல் தெப்பம் நடைபெறும்.உற்சவம் பிப்.,16ல் கொடியேற்றி, மாலையில் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.தினமும் இரவு பெருமாள் திருவீதி புறப்பாடு நடந்து வருகிறது. 21ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நடந்தது. நேற்று மாலை சூர்ணாபிஷேகம், தங்கப் பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடந்தது.இன்று இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.நாளை காலை 10.40 மணிக்கு திருவீதி புறப்பாடும், தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும். இரவு 9 மணிக்கு திருவீதி புறப்பாடு நடைபெறும். பிப்.25ல் காலை 9.23 மணிக்கு திருவீதி புறப்பாடும், மதியம் 12.58 மணிக்கு பகல் தெப்பம் சுற்றலும் நடைபெறும். இரவு 10 மணிக்கு தெப்பம் மும்முறை சுற்றும். 11ம் திருநாளாக பிப்.,26ல் காலை தீர்த்தவாரி, தங்கப்பல்லக்கில் பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.