பதிவு செய்த நாள்
23
பிப்
2013
10:02
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு ஸ்ரீருத்ரயாகம் பிப். 25 ல் நடக்கிறது.திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றியுள்ள கடைகளை தற்காலிகமாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்கு நகராட்சி சார்பில் மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருப்பணிக்கு முன்னோட்டமாக ஸ்ரீருத்ரயாகம் பிப். 25 ல் நடைபெற உள்ளது. கோயிலில் நாளை(பிப். 24) மாலை 6 ல் இருந்து 9 மணி வரை யஜமான அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஜனம், கலசஸ்தாபனம், ஸ்ரீருத்ர ஜபம், முதல்கால யாகபூஜை, பூர்ணாகுதி தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.மறுநாள்(பிப். 25) காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், இரண்டாம் கால யாக பூஜை, ஸ்ரீருத்ர ஹோமம், மஹா பூர்ணாகதி, தீபாராதனை கலசங்கள் புறப்படுதல், மூலஸ்தான மூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம், கலசாபிஷேகம் நடக்கிறது.செயல் அலுவலர் அறிவழகன், உதவி ஆணையர் ரமேஷ் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.