பதிவு செய்த நாள்
23
பிப்
2013
10:02
பெரியகுளம்: வடுகபட்டி பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நடத்தி வைத்தார். பெரியகுளம் அருகே வடுகபட்டியில், வேளாளர் உறவின்முறைக்குப் பாத்தியமான பகவதி அம்மன்,ராஜேந்திரவிநாயகர், பாலசுப்பிரமணியர் ஆலயங்களில் ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. பெரியகுளம் வட்டார வேளாளர் சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோபுரகலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அகில உலக முதலியார் பிள்ளைமார் சங்க நிறுவனத் தலைவர் அருணாச்சலமுதலியார், ருக்மணி அம்மாள், தமிழ்நாடு வ.உ.சி., பேரவை தலைவர் முருகேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் குமார், தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் செல்வராஜ், தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்க தலைவர் காந்தவாசன், செயலாளர் ரவி, தமிழ் இலக்கிய மன்ற அமைப்பாளர் புலவர் ராசரத்தினம். வடுகபட்டி வேளாளர் உறவின்முறை தலைவர் முத்துவேல்பிள்ளை, திருப்பணிக்குழு தலைவர் மாசானம் பிள்ளை, நிர்வாகக்குழுவினர்கள் நல்லாசிரியர் வைகுண்டம், ஜெகநாதன், முத்துவேல், சுப்பிரமணியம், மார்க்கண்டன், மாடசாமி, நாகராசு, மாடவேல், ஆண்டிபட்டி செல்லம்மாள் ஆசியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாலமுருகன். குருவப்ப விநாயகர் கோயில் அறக்காவலர் சவுந்திரபாண்டியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜகுரு, செல்லமணி, அழகர், லட்சுமிநாராயணன்,விஸ்வம்,கணேசன், குமரேசன், மாரிமுத்து, ரவி, வேளாளர் சமுதாய பொதுமக்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காலை 8 மணி முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வேளாளர் உறவின்முறை திருப்பணிக்குழு, வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகள் சங்கம், பழனி தைப்பூச பாதயாத்திரைக்குழு, வேளாளர் மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்திருந்தனர்.