பதிவு செய்த நாள்
23
பிப்
2013
10:02
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கொழிஞ்சிப்பட்டியில், பண்ணையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பத்து ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, கோவிலுக்கு, 35 லட்சம் ரூபாய் மதிப்பில், திருத்தேர் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தேர் வெள்ளோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்வாமி எழுந்தருளினார். திருத்தேர் வெள்ளோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து இழுத்து, கோவிலை சுற்றி வந்தனர்.முடிவில், பண்மையம்மன் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.