பதிவு செய்த நாள்
23
பிப்
2013
10:02
கன்னியாகுமரி: சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து திருசெந்துருக்கு அய்யாவைகுண்டர் ஜோதி பாதயாத்திரை நேற்று தொடங்கியது,அய்யா வைகுண்டரை 181 ஆண்டுகளுக்கு முன் அன்னை பொன்னு வெயிலாள் மற்றும் சுற்றமும், திருசெந்துர் நோக்கி தொட்டில் கட்டி தூக்கி சென்றனர். கூடன்குளம்,சுக்குபார்,தோட்டாவழிஆறு, சூறாவளிக்காடு கடந்து சென்று நல்ல தண்ணீர் ஆவி அருகேநிழல் பார்த்து தங்கி இருந்து கட்டன்னம், கருப்புகட்டி, பழம், பதார்த்தம் உண்டு தகையாறினர். அப்போது பேரதிசயம் நடந்தது. திருச்செந்துர் தலத்திலிருந்து நாரயணமுர்த்தி இருமுனிவர்களை அனுப்பி அழைத்து வரப்பணிந்தார். இருமுனிவர்களும் நடக்க முடியாது தொட்டிலில் படுத்திருந்த அய்யாவை துக்கிச்சுமந்து வேகமாக சென்றனர்.அன்னை பொன்னுவெயிலாள் அம்மையும் உடன் சென்றவர்களின் கண்களுக்கு முனிவர்கள் புலப்படவில்லை. அய்யாவே எழுந்து வேகமாக செல்கிறார் என்று எண்ணி பின் தொடர்ந்து ஒட்டமும் நடையுமாக சென்றனர். அந்த இடம் உறுமன்குளம் கரை என்று கருதப்படுவதால் அய்யா அருள் கொண்டு எழுந்த இடம் வரை நம்முன்னோர் நடந்த வழித்தடத்தில் ஒரு பத்திபாதயாத்திரை நடக்கிறது. 181-வது பாதயாத்திரை சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து நேற்று காலை தொடங்கியது. பாலபிரஜாபதிஅடிகள் தொடக்கிவைத்தார் . தர்மரஜினி,நெல்லை மாவட்ட அய்யா வைகுண்டர் திருச்சபை நிர்வாகி தங்கராஜ் மற்றும் 25 -க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். யாத்திரை அழகப்பப்புரம், செட்டிகுளம், விஜயாபதி, சிதம்பரபுரம் வழியாக 24-ம் தேதி உருமன்குளம்கரை சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து வாகனம் முலம் ஜோதி திருச்செந்துர் சென்றடைகிறது.