பதிவு செய்த நாள்
25
பிப்
2013
11:02
காரமடை அரங்கநாதசுவாமி தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், வரும் 27ம் தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கோவை) கோட்ட பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: காரமடை அரங்கநாதசுவாமி தேர் திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக நாளை(25ம் தேதி) முதல் வரும் 27ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, கோவை-காரமடை 60, திருப்பூர்-காரமடை 20, மேட்டுப்பாளையம்-காரமடை 22, அன்னூர்-காரமடை 12, சோமனூர்-காரமடை 5, தோலம்பாளையம்-காரமடை 6, வெள்ளியங்காடு-காரமடை 2, சிறுமுகை-காரமடை 2 என, மொத்தம் 129 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்கள் அனைத்தும் 25ம் தேதி அதிகாலை முதல் சம்பந்தப்பட்ட பஸ் ஸ்டாண்டிலிருந்து துவங்கி, வரும் 27ம் தேதி கூட்டம் முடியும் வரை முழுமையாக இயக்கப்படும். பிற இடங்களிலிருந்து தேவைக்கேற்ப பகல், இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு இயக்க மையங்களில் தற்காலிக அலுவலங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்தை சீரமைக்க அலுவலர்களும், இதர பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். மிக விரைவான போக்குவரத்து வசதியினை அளிக்கும் வகையில் ஆங்காங்கே வயர்லெஸ் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.