ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர்கோயிலில் பிரம்மோற்சவ விழாவின், ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன, ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா தேரோட்டத்தை துவக்கி வைத்தார். முக்கிய தெருக்களில் சென்று, 8.30 மணிக்கு தேர் கோயிலுக்கு வந்தது. ராஜபாளையம் மற்றும் கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.