உளவுத்துறை எச்சரிக்கை: மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2013 05:02
மதுரை: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் கடந்த வியாழன அன்று குண்டுவெடித்து 20 பேர் வரை பலியாகினர். இதனையடுத்து நாடு முழுவதும் முக்கிய இட்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோவில் ஊழியர்கள் அடையாள அட்டையை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் செல்போன், கேமரா ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டுகிறது.