அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, தண்ணீர் இல்லாத தெப்பத்தை சுந்தரராஜ பெருமாள் வலம் வந்தார்.இக்கோயில் மாசித் திருவிழா பிப்.,23ல் துவங்கியது. மறுநாள் கஜேந்திர மோட்சம் நடந்தது. பொய்கைகரைப்பட்டியில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளுவதற்காக நேற்று காலை 9.30 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டார். மதியம் 12 மணிக்கு பொய்கைகரைப்பட்டி வந்தார். அங்கு கிராமத்தினர் மேள, தாளம் முழங்க வரவேற்றனர். பின் 12.20 மணிக்கு தெப்பத்திற்கு வந்தார். இந்த ஆண்டு தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் குளக்கரையை சுற்றி வலம் வந்தார். பின், குளக்கரையில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளினார். அங்கு தீப ஆராதனை நடந்தது. மாலையில் பெருமாள் புறப்பட்டு கோயிலை சென்றடைந்தார். ஏற்பாடுகளை, தக்கார் வெங்கடாஜலம் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.