பதிவு செய்த நாள்
26
பிப்
2013
10:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்தேரோட்டம், நேற்று, கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர்.இக்கோவில், மாசித்திருவிழா, இம்மாதம் 16ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில், தினமும், சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. 10ம் நாளான, நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பின், காலை 6:40 மணிக்கு, தேரோட்டம் துவங்கியது. முதலில், விநாயகர் தேரும், பின்னர், சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி - தெய்வானை அம்பாள் தேரும், மூன்றாவதாக, தெய்வானை அம்பாள் தேரும், அடுத்தடுத்து, ஏராளமான பக்தர்களால், வடம்பிடித்து இழுக்கப்பட்டு, நான்கு ரதவீதிகளைச் சுற்றி நிலைசேர்ந்தன. இன்றிரவு, தெப்ப உற்சவம் நடக்கிறது.