Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காஞ்சி காமாட்சியம்மன் வெள்ளி ரத உலா! நமசிவாய வாழ்க கோஷத்துடன் திருமுருகன்பூண்டி தேரோட்டம் நமசிவாய வாழ்க கோஷத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 பிப்
2013
10:02

கும்பகோணம்: மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று அதிகாலை முதல், பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.வடக்கே கும்பமேளா போல், தெற்கே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது மகாமக திருவிழா. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், மக நட்சத்திரத்தின் போது, மாசி மக பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கும்பகோணத்தில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவில்களிலும், பெருமாள் கோவில்களிலும் வெகு விமரிசையாக மாசி மக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய கோவில்களில் மாசி மக திருவிழாவுக்காக கடந்த, 16ம் தேதி கொடியேற்றப்பட்டு, 10 நாள் பிரமோற்சவ விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 23, 24ம் தேதி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலின், ஐந்து தேர்களின் தேரோட்டமும், நேற்று முன்தினம் மாலை, அபிமுகேஸ்வரர் கோவில் தேரோட்டமும் மகா மக குளக்கரையில் நடந்தன.மாசி மக திருவிழாவின் முக்கிய திருவிழாவான தீர்த்தவாரி, நேற்று மகா மக குளத்தில் நடந்தது.இதற்காக நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மகா மக குளத்தின் கரைகளில், தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடினர். பின்னர் மகா மக குளத்தின் நான்கு கரைகளில் உள்ள, 16 சோடச லிங்கங்களையும் வழிபட்டனர். தீர்த்தவாரி நேரத்தில், மகா மக குளக்கரையில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar