பதிவு செய்த நாள்
26
பிப்
2013
11:02
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றிய தலைவர் கஸ்தூரிநாகராஜன் தலைமையில் முதல்வர் ஜெ.,பிறந்த நாளை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடும்,தொடர்ந்து ,அன்னதானமும் நடந்தது.ஒன்றிய தலைவர் கஸ்தூரி நாகராஜன் இலவச வேட்டிகளை வழங்கினார்.முன்னாள் ஒன்றிய செயலர்கள் நாகராஜன், மூர்த்தி,துணைத் தலைவர் பத்மனாபன்,கவுன்சிலர்கள் அழகு ,லதா,ரேணுகாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க.,வக்கீல் பிரிவு சார்பில் திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், பைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. டி.இ.எல்.சி.மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உணவு வழங்கப்பட்டது.மாவட்ட வக்கீல்கள் பிரிவு செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். ன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன், வக்கீல் பிரிவு தலைவர் ராமன், துணைச் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தேவகோட்டை நகர அ.தி.மு.க.,சார்பில் கோதண்டராமர் கோயிலில் சுதர்சன ஹோமம் நடந்தது.மாவட்டச் செயலாளர் முருகானந்தம், ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்,முன்னாள் எம்.எல்.ஏக்கள் சொர்ணலிங்கம், உமாதேவன், காரைக்குடி நகராட்சி தலைவி கற்பகம்,தேவகோட்டை நகர செயலாளர் ராமச்சந்திரன்,நகராட்சி துணை தலைவர் சுந்தரலிங்கம்,கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன்,பொறியாளர் ஆனந்தகுமரன், கயிலை பொன்ராஜ்,தேவகோட்டை நகராட்சி, ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 13 வட்ட ஜெ.பேரவை செயலாளர்,கண்ணங்குடி ஒன்றியஜெ.பேரவை இணை செயலாளர் பாலகங்கா, தேவகோட்டை ஒன்றிய எம்.ஜீ.ஆர் மன்ற செயலாளர் உருவாட்டி போஸ்,ராஜா பங்கேற்றனர்.