பதிவு செய்த நாள்
26
பிப்
2013
11:02
விருதுநகர்: விருதுநகர் சவேரியார் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் பிப்.,13ம் தேதி துவங்கியது. இதையொட்டி, பாண்டியன் நகர் சவேரியார் ஆலயத்தில், பாதிரியார் ஜேசுராஜ் தலைமையில் 14 பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது. இரண்டாம் ஞாயிறில் சிவகாசி வேளாங்ககண்ணி ஆலயத்தில் பாதயாத்திரை சென்று, சிலுவைப்பாதை வழிபாடும் நடத்தப்பட்டது. மூன்றாம் ஞாயிறுயன்று (மார்ச் 9), முழு நாள் தியானம் நடக்கவுள்ளது. ஐந்தாம் ஞாயிறில் மல்லாங்கிணர் ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு, பாத யாத்திரை சென்று, சிலுவைப்பாதை வழிபாடு நடக்கவுள்ளது. மார்ச் 24ல் விருதுநகர் அண்ணாநகர் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து, குருத்தோலை ஊர்வலம் புறப்பட்டு, சவேரியார் ஆலயத்தில் முடியும். அங்கு திருப்பலி, மறையுரையும் நடக்கவுள்ளது.