பதிவு செய்த நாள்
26
பிப்
2013
11:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மேகலசின்னம்பள்ளி, ஆதி பிரசன்ன சவுடேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி, கடந்த, 20ம் தேதி கங்கை பூஜை, கணபதி பூஜை, ஆலய புண்யாவதனம் ஆகியவை நடந்தது. 21ம் தேதி காலை யாகசாலை பிரவேசம், பஞ்ச பிரம்ம பூஜை, நவரக்கிரக பூஜை, மஹா கணபதி ஹோமம் ஆகியவை நடந்தது.இரவு, 11 மணிக்கு ஸ்வாமி சயனோற்சவம், பிம்பசுத்தி, நாடி சந்தானம், அஷ்டபந்தன மஹா பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பிம்ப தரிசனம், கோ பூஜை, தீபாராதனை, தீர்த்த பிரசாதம் நடந்தது.விழாவில், மேகலசின்னம்பள்ளி, தேன்கனிக்கேட்டை, ஓசூர், சின்னார், சென்னை, காரிமங்கலம், அனுமந்தபுரம், புட்டிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேகலசின்னம்பள்ளி காண்ட்லா இளைஞர் சங்கம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.